Home உலகம் நைஜீரியாவில் மசூதிக்குள் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி

நைஜீரியாவில் மசூதிக்குள் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி

by admin

நைஜீரியாவில்    மசூதிக்குள்  இன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் 50க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள அடமாவா மாநிலத்தில் உள்ள ஒரு மசூதிக்குள்  புகுந்த   தீவிரவாதி தனது உடலில் கட்டி இருந்த வெடி குண்டுகளை வெடிக்க வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரையில் எவரும் உரிமை கோரவில்லை, எனினும் போகோ ஹாராம் தீவிரவாதிகளே இவ்வாறான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த எட்டு ஆண்டுகளாக போகோ ஹாராம் தீவிரவாத மோதல் சம்பவங்களினால் சுமார் 20000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்த மாநிலத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 45 பேர் வரையில் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கா

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More