Home இலங்கை பா.டெனீஸ்வரனின் பதவி நீக்கம் தொடர்பிலான ரீட் மனுவை தொடர்ந்து விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு

பா.டெனீஸ்வரனின் பதவி நீக்கம் தொடர்பிலான ரீட் மனுவை தொடர்ந்து விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு

by admin


வட மாகாண முன்னாள்  போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனின்  பதவி நீக்கம் தொடர்பிலான ரீட் மனுவை தொடர்ந்து விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   குறித்த மனுவானது  கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தமைக்கெதிராக டெனீஸ்வரனினால்  உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலேயே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்தவழக்கின் பிரதிவாதிகளாக  வடமாகாண முதலமைச்சர் சிவி. விக்னேஸ்வரன், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, மாகாண அமைச்சர்கள் ஜி.குணசீலன், அனந்தி சசிதரன், கே.சர்வேஸ்வரன், கே.சிவனேசன் மற்றும் முன்னாள் அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து  அமைச்சர் பதவியிலிருந்து வட  மாகாண முதலமைச்சர் தன்னை   தன்னை நீக்கியதனை எதிர்த்து, கடந்த ஓகஸ்ட் மாதம்  டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்த  நிலையில் குறித்த மனுவை  மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More