Home இந்தியா மத்திய பிரதேசத்தில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல்:-

மத்திய பிரதேசத்தில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல்:-

by admin


இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவுக்கு அந்த மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

தேசிய குற்ற ஆவண பதிவேடு புள்ளிவிவரங்களின்படி பலாத்கார குற்றங்களில் மத்திய பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் கடந்த ஓராண்டில் 4,279 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 2,260 பேர் சிறுமிகள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
மேலும் இந்த மாத ஆரம்பத்தில் தலைநகர் போபாலில் 10 வயது சிறுமியை 3 பேர் கும்பல் பலாத்காரம் செய்த கொடூரம் இந்தியா முழுவதும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது.

இந்நிலையில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவுக்கு அந்த மாநில அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More