Home இலங்கை இ.போ.ச. போராட்டம் தொடரும் – இ.போ.ச வெளிமாகாண சேவைகளும் நிறுத்தம்

இ.போ.ச. போராட்டம் தொடரும் – இ.போ.ச வெளிமாகாண சேவைகளும் நிறுத்தம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

-இலங்கை போக்குவரத்துச் சபையின் உயர் அதிகாரிக்கும் வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்கத்துக்கும் இடையே வவுனியாவில் இன்று நண்பகல் இடம்பெற்ற பேச்சுக்களின் போது சாதகமான முடிவுகள் எட்டப்படவில்லை. அதனால் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்புப் போராட்டம் தொடரும் என வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் பிரதான முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரை வடக்கிலிருந்து உடனடியாக இடமாற்றக்கோரி வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஊழியர்கள் நேற்று செவ்வாய்கிழமை தொடக்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அரச பேருந்து சேவைகள் வடக்கு முழுவதும் இன்று இரண்டாவது நாளாக முடங்கி உள்ளன. இதனால் மாணவர்களும் பொதுமக்களும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் வடபிராந்திய போக்குவரத்துச் சபை தொழிற்சங்கத்துடன் பேச்சு நடத்த இலங்கைப் போக்குவரத்துச் சபையின் உயர் அதிகாரி உள்ளிட்ட குழு இன்று வவுனியாவுக்கு வந்தது. இரு தரப்புக்கும் இன்று நண்பகல் பேச்சுக்கள் இடம்பெற்றன. எனினும் தொழிற்சங்கத்தின் கோரிக்கைக்கு சாதகமான பதிலை கொழும்பு அதிகாரி வழங்கவில்லை. இதனால் தமது போராட்டம் தொடருமென தொழிற்சங்கம் தெரிவித்தது.

 இ.போ.ச வெளிமாகாண சேவைகளும் நிறுத்தம்

வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்கப் போராட்டம் நாளை தொடக்கம் விரிவாக்கப்படும் என அறிக்கப்பட்டுள்ளது.  வெளி மாகாணங்களிலிருந்து வடக்குக்கான சேவையில் ஈடுபடும் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பேருந்துகளும் நாளை முதல் சேவையில் ஈடுபடமாட்டாது என வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்கம் தெரிவித்தது.

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய சபையின் பிரதான முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரியையும் வடக்கிலிருந்து உடனடியாக இடமாற்றக் கோரி வடபிராந்திய போக்குவரத்துச் சபை ஊழியர்கள் நேற்று தொடக்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

தொழிற்சங்கத்துக்கும் போக்குவரத்துச் சபைக்கும் இடையே நேற்றும் இன்றும் இடம்பெற்ற பேச்சுக்கள் தோல்வியடைந்தன.
இந்த நிலைநிலேயே தமது போராட்டத்தை விரிவுபடுத்துவதாகத் தொழிற்சங்கம் இன்று மாலை அறிவித்தது.

‘வடக்குக்கான சேவையில் ஈடுபடும் ஏனைய மாகாண பேருந்து சேவைகளை நாளை முதல் நிறுத்திமாறு கோரியுள்ளோம். அவர்கள் சாதகமான நடவடிக்கை எடுப்பர் என எதிர்பார்க்கின்றோம்.
அத்துடன், யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் கொட்டகை அமைத்து நாளைக் காலை முதல் யாழ்ப்பாண சாலை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவர்’ என்று தொழிற்சங்க ஒழுங்கமைப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More