Home இலங்கை மானிப்பாயில் இடம்பெற்ற விபத்தில் மாணவன் உயிரிழப்பு.

மானிப்பாயில் இடம்பெற்ற விபத்தில் மாணவன் உயிரிழப்பு.

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மானிப்பாய் வீதி, ஆலடிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன்  உயிரிழந்துள்ளார்.  மானிப்பாய் ஆலடி பகுதியில் நேற்று  (29) மாலை ஆறு மணியளவில்  குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மானிப்பாய் பகுதியிலிருந்து உடுவிலுள்ள தனது வீட்டுக்கு குறித்த சிறுவன்  ஸ்கூட்டி  மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற போது பிரதான வீதியால் துவிச்சக்கர வண்டியில் வந்த பெண்னொருவர் குறுக்கு வீதிக்கு திடீரென திரும்பியதால் மோட்டார் சைக்கிளின் வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் குறித்த பெண்ணின் துவிச்சக்கர வண்டியுடன் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த இருவரும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும்   அச்சிறுவன் மரணமடைந்துள்ளார்.   உதயசூரியன் வீதியை சேர்ந்த அடம்ஸ் நீல்சன் லியனாடோ அலோசியஸ் என்ற 17 வயதுடைய மாணவனே  இவ்வாறு உயிரிழந்துள்ளார். .

இதேவேளை இவ்விபத்தில் படுகாயமடைந்த புதுமடம், உடுவில் தெற்கு மானிப்பாயை சேர்ந்த 33  வயதுடைய அமிர்தரஞ்சினி சுரேந்திரன் என்ற பெண் தொடர்ந்தும் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
00000

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More