Home இலங்கை ஆவா குழுவுக்கு சுவிஸ்சில் இருந்து நிதி உதவிகள் கிடைக்கின்றதாம்???

ஆவா குழுவுக்கு சுவிஸ்சில் இருந்து நிதி உதவிகள் கிடைக்கின்றதாம்???

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள உள்ள ஆவா குழுவின் முக்கிய செயற்பட்டாளர்கள் தொடர்பில் தமக்கு இரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன என யாழ். காவல் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழில்.கடந்த காலத்தில் ஆவா குழுவின் பிரதான செயற்பாட்டாளர்களில் ஒருவரான சன்னா என அழைக்கப்படும் பிரசன்னா தற்போது சுவிஸ்  நாட்டில் அகதி அந்தஸ்து கோரி இருப்பதாகவும் , அவருடன் சுவிஸ்சில் சேர்ந்து இயங்கும் சிலரே யாழில் இயங்கும் ஆவா குழுவுக்கு பண உதவிகளை செய்து வருகின்றனர் என இரகசிய தகவல்கள் மூலம் அறிந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு சுவிஸ்சில் இருந்து குறித்த நபர்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை ஆவா குழுவின் பிரதான செயற்பாட்டாளர்களான தேவா , பிரகாஸ் மற்றும் டானியல் ஆகிய மூவர் இந்தியாவில் திருச்சி பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி நடமாடினார்கள் என திருச்சி கியூ பிரிவு  காவல்துறையினரினால் ; கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அவர்களையும் விரைவில் இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளோம் என மேலும்  காவல்துறைத் தகவல்கள் தெரிவித்துள்ளன

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More