Home இலங்கை தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக லங்கா ஈ நியூஸ் தடை குறித்த விபரங்களை வெளியிட முடியாது – TRC

தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக லங்கா ஈ நியூஸ் தடை குறித்த விபரங்களை வெளியிட முடியாது – TRC

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என்ற காரணத்தினால் லங்கா ஈ நியூஸ் இணையத் தளத்தின் மீதான தடை குறித்த விபரங்களை வெளியிட முடியாது என தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தின் கீழ், லங்கா ஈ நியூஸ் இணைய தளம் ஏன் முடக்கப்பட்டது என்பது பற்றி விளக்கம் அளிக்குமாறு தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரப்பட்டிருந்தது. எனினும், தேசியப் பாதுகாப்பு காரணிகளின் அடிப்படையில் இது பற்றிய விபரங்களை வெளியிட முடியாது என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பைச் சேர்ந்த சம்பத் சமரக்கோன் என்பவரினால் லங்கா ஈ நியூஸ் இணைய தளத்திற்கு எதிரான தடை குறித்து விளக்கம் அறிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்புரைக்கு அமைய இலங்கை தொலைபேசி நிறுவனங்கள் லங்கா ஈ நியூஸ் இணைய தளத்தை இலங்கையில் முடக்கியுள்ளது.
இணைய தளத்தி;ன் மீதான தடை குறித்து கடுமையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More