Home இந்தியா அவுஸ்திரேலியாவில் இலங்கையர் வீட்டில் 8 ஆண்டுகள் அடிமையாக இருந்த இந்திய பணிப்பெண் மீட்பு:-

அவுஸ்திரேலியாவில் இலங்கையர் வீட்டில் 8 ஆண்டுகள் அடிமையாக இருந்த இந்திய பணிப்பெண் மீட்பு:-

by admin

அவுஸ்திரேலியாவில் ஒரு வீட்டில் சுமார் 8 ஆண்டுகள் அடிமையாக இருந்த இந்திய பணிப்பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், இலங்கையைச் சேர்ந்த கந்தசாமி கண்ணன், குமுதினி ஆகியோர் தமது 3 குழந்தைகளைப் பராமரிக்க இந்தியாவில் இருந்து பணிப்பெண்ணை வேலைக்கு நியமித்துள்ளனர். சுற்றுலா விசாவில் அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட குறித்த இந்திய பெண்ணை அதிகாலை 5.30 மணி முதல் நள்ளிரவு வரை ஓய்வின்றி பணியாற்ற குறித்த இலங்கை தம்பதியர் வற்புறுத்தியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு குறித்த இலங்கைத் தம்பதியினர் ஒருமாதம் சுற்றுலா சென்றபோது இந்திய பணிப்பெண்ணை வீட்டில் பூட்டி வைத்து சென்றுள்ளதுடன் அவரது உணவுக்கும் ஏற்பாடு செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மிகவும் பலவீனமடைந்ததால் போலி பெயரில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் சந்தேகமடைந்த மருத்துவமனை நிர்வாகம் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கந்தசாமி குடும்பத்தினர் இந்திய பணிப்பெண்ணை 8 ஆண்டுகள் அடிமையாக நடத்தியது தெரியவந்துள்ளது. அந்த பெண் மீட்கப்பட்டு உரிய மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதொடர்பான வழக்கு மெல்போர்ன் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்ட கந்தசாமி, குமுதினி ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட இந்தியப் பெண்ணின் பெயர், விவரம் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More