Home இந்தியா ஒக்கி புயல் – காணாமல் போன மீனவர்கள் குறித்து  பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு  நீதிமன்றம் உத்தரவு:-

ஒக்கி புயல் – காணாமல் போன மீனவர்கள் குறித்து  பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு  நீதிமன்றம் உத்தரவு:-

by admin

ஒக்கி புயலில் சிக்கி காணாமல் போன 551 மீனவர்கள் தொடர்பாக எதிர்வரும் 22ம் திகதி பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தினைச் சேர்ந்த ஒருவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில் கடந்த 29ம் திகதி இரவிலும், மறுநாள் பகலிலும் வந்த ஒக்கி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பேரழிவு ஏற்பட்டது. அந்த சமயத்தில் 200 படகுகளில் ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் 42 மீனவ கிராமங்களில் வாழும் 80 ஆயிரம் மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழில் செய்து வருகின்ற நிலையில் ஒக்கி புயல் தொடர்பாக மத்திய, மாநில அரசு அதிகாரிகள் முன்கூட்டியே எச்சரிக்கவில்லை.

இதனால் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் புயலில் சிக்கிக்கொண்டனர்.இவர்களை மீட்கும் நடவடிக்கையிலும்; மத்திய-மாநில அரசுகள் ஆர்வம் காட்டவில்லை. மீனவர் கிராமங்களில் டிசம்பர் 3 முதல் 17 வரை ஆய்வு நடத்தியபோது 551 மீனவர்கள் இதுவரை வீடு திரும்பாதது தெரிய வந்தது. அவர்’களைக் கண்டுபிடித்து முன்னிலைப்படுத்த மத்திய-மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தநிலையில் அப்போது ஒக்கி புயலில் சிக்கி 551 மீனவர்கள் காணாமல் போனமை தொடர்பாக எதிர்வரும் 22ம் திகதி பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More