Home இலங்கை பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறு இல்லை – தற்கொலைக்கு முயன்ற யாழ். மாணவன் வைத்தியசாலையில்:-

பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறு இல்லை – தற்கொலைக்கு முயன்ற யாழ். மாணவன் வைத்தியசாலையில்:-

by admin

உயர் தரப் பரீட்சையில் தான் எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்காமையின் காரணமாக மனமுடைந்த யாழ்ப்பாணம், வடமராட்சி பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், நேற்று மாலை விசமருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வர்த்தக பிரிவில் பரீட்சைக்கு தோற்றியுள்ள இந்த மாணவன், நண்பர்களை விட அதிக பெறுபேறு கிடைக்காமையின் காரணமாக, மிகுந்த மனவருத்தத்துடன் இருந்ததாகவும், மாலை நேரம் குறித்த மாணவனின் அறையில் அழுகுரல் கேட்டதையடுத்து அறைக்கு சென்று பார்த்த போது மாணவன் வாந்தி எடுத்துக் கொண்டிருந்ததால் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாகவும் மாணவனின் தந்தை காவற்துறையிடம் கூறியுள்ளார்.

எனினும் அவர் பருகியுள்ள விஷ மருந்து பாரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதல்ல என்பதனால் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பில்லை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். வடமராச்சி காவற்துறையினர் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More