Home இலங்கை குளங்களின் நீர் மட்டம் உயராமையினால், விவசாயக் குழு கூட்டங்களுக்கு தாமதம் ஏற்பட்டுள்ளது..

குளங்களின் நீர் மட்டம் உயராமையினால், விவசாயக் குழு கூட்டங்களுக்கு தாமதம் ஏற்பட்டுள்ளது..

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

குளங்களின் நீர் மட்டம் உயர்வடையாமையின் காரணமே காலபோக நெற்செய்கைக் கூட்டங்களை நடாத்துவதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

நேற்று 22.10.2018 மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் காலபோக நெற்செய்கைக் கூட்டங்கள் நடைபெறவில்லை விவசாயிகள் தம்மிடம் தெரிவித்ததாக கூட்டத்தில் தெரிவித்த நிலையில் நீர்ப்பாசனத் திணைக்களமே கூட்டங்களை ஒழுங்குப்படுத்துவது வழமை. ஆனால் குளங்களில் நீர் மட்டங்கள் உயர்வடையவில்லை. இதுவே கூட்டங்களை நடாத்துவதற்கு தாமதங்களை உருவாக்கி உள்ளது. எனத் தெரிவித்த அவர் வவுனிக்குளத்திற்கும் முத்தையன்கட்டுக்குளத்திற்கும் விரைவாக கூட்டங்களை நடாத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More