Home பிரதான செய்திகள் இங்கிலாந்துக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியில் இலங்கை 219 ஓட்டங்களால் வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியில் இலங்கை 219 ஓட்டங்களால் வெற்றி

by admin


இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி டக்வெத் லூயிஸ் முறையில் 219 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இலங்கை அணியுடன் 5 ஒருநாள் போட்டிகள், 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி வரும் நிலையில் ஒருநாள் தொடரை இங்கிலாந்து 3:1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இந் நிலையில் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்றையதினம் நடைபெற்றது.இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 366 ஓட்டங்களைப் பெற்றது.

இதனையடுத்து 367 என்ற வெற்றிஇலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 18.2 ஆவது ஓவர் விளையாடிக்கொண்டிந்த வேளை போட்டி மழை காரணமாக இடை நிறுத்தப்பட்டது.இந்த நிலையில் இங்கிலாந்து 26.1 ஓவரில் அணி 9 விக்கெட்டினை இழந்து 139 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்ததுடன், வெற்றிக்காக இன்னும் 235 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

எனினும் மழை தொடர்ச்சியாக பெய்த காரணத்தினால் இலங்கை அணி டக்வெத் லூயிஸ் முறையில் 219 ஓட்டத்தினால் அபாரமாக வெற்றியீட்டியது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More