Home இலங்கை 15 தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் கைது

15 தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் கைது

by admin

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டடத்தை ஆக்கிரமித்து போராட்டம் நடத்திய 15 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பகிடிவதையில் ஈடுபட்ட குற்றத்துக்காக, பல்கலைக்கழகத்திலிருந்து விலக்கப்பட்டுள்ள, தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த 4 மாணவர்களை மீளவும் சேர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டடத்தை ஆக்கிரமித்து தொழில்நுட்ப துறையை சேர்ந்த சில பெரும்பான்மையின மாணவர்கள், கடந்த இரண்டு வார காலமாக போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் காரணமாக, பல்கலைக்கழக நிர்வாக மற்றும் நிதி நடவடிக்கைகள் கடந்த இரு வாரங்களாக முடங்கியுள்ளநிலையில், மாணவர்களை அங்கிருந்து அகற்றுமாறு, காவல்துறையினருக்கு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்திருந்த போதிலும் மாணவர்கள் வெளியேற்றப்படவில்லை. இதனையடுத்து போராட்டம் மேற்கொண்ட 15 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More