Home இலங்கை நாலக்க சில்வாவினால், வெலிக்கடைச் சிறையில் அமைதியற்ற சூழ்நிலை…

நாலக்க சில்வாவினால், வெலிக்கடைச் சிறையில் அமைதியற்ற சூழ்நிலை…

by admin

வெலிக்கடைச் சிறைச்சாலையில் வை.ஓ பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் நாலக்க சில்வா, வேறு கைதிகள் இன்றி தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உரிய நடைமுறைகளுக்கமைய, கொழும்பு மகசீன் சிறைச்சாலையிலேயே நாலக்க சில்வா தடுத்து வைக்கப்பட்டிருக்க வேண்டுமென்றும் அவரது பாதுகாப்புக் கருதியே, வெலிக்கடையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நேற் இரவு, சிறைச்சாலைக்கு நாலக்க சில்வாவை அழைத்து வருவதற்கு முன்னரே, அவரைப் பரிசோதிப்பதற்காக, அம்பியூலன்ஸ் வண்டி மூலம் வைத்தியரொருவர் சிறைச்சாலைக்கு வந்து அவரை பரிசோதித்து அவர் நோய்வாய்ப்பட்டு இருக்கவில்லை எனவும் எனினும் நாலக்க சில்வாவை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு, பரிந்துரை செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்த நிலையில், அவ்விடத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More