Home இலங்கை ரணிலுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு – வாகனங்களை மீளப்பெறுமாறு மைத்திரி காவல்துறை மா அதிபருக்கு உத்தரவு

ரணிலுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு – வாகனங்களை மீளப்பெறுமாறு மைத்திரி காவல்துறை மா அதிபருக்கு உத்தரவு

by admin

ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு மற்றும் வாகனங்களை மீளப்பெறுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காவல்துறை மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். அதேவேளை இன்று சனிக்கிழமை மாலை 4 மணிக்கு அலரி மாளிகையை ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ள போதும் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் தானே பிரதமர் என அறிவித்துள்ளதுடன் அலரி மாளிகையில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆரதவாளர்கள் என பெருந்தொகையான ஆதரவாளர்கள் அலரி மாளிகைக்குள் காணப்படுவதுடன் இராஜ தந்திரிகள் அரசியல் தரப்புக்கள் என பலதரப்பட்டவர்களையும் ரணில் விக்ரமசிங்க சந்தித்து வருகின்றார்.

இந்த நிலையிலேயே அவரது பாதுகாப்பு மற்றும் வாகனங்களை மீளப்பெற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More