Home இலங்கை 5 மணிக்கு ரணில் விக்கிரமசிங்க அறிவிக்கப்போவது என்ன?

5 மணிக்கு ரணில் விக்கிரமசிங்க அறிவிக்கப்போவது என்ன?

by admin

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இன்று மாலை 5 மணிக்கு, விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். இதேவேளை நாளை கொழும்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை ஐக்கியதேசியக் கட்சி மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்கின்ற அனைவரும் நாளையதினம் இடம்பெறவுள்ள மாபெரும் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அகிலவிராஜ் காரியவசம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்,. ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்கின்ற அனைவரும் நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள மாபெரும் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுவதாகவும், இந்த மாபெரும் போராட்டம் நாளை மதியம் 12.30 மணிக்கு கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இடம்பெறவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More