Home உலகம் காற்று மாசுபாடு காரணமாக ஒரு வருடத்தில் 6 லட்சம் குழந்தைகள் உயிரிழப்பு

காற்று மாசுபாடு காரணமாக ஒரு வருடத்தில் 6 லட்சம் குழந்தைகள் உயிரிழப்பு

by admin


காற்று மாசுபாடு காரணமாக 2016-ம் ஆண்டில் மட்டும் 6 லட்சம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்ற உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற காற்று மாசுபாடு மற்றும் உடல்நலம் குறித்த கருத்தரங்கில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காற்றில் கலந்துள்ள நஞ்சை சுவாசிப்பதால் குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுவதாகத் தெரியவந்துள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

மேலும் உலக அளவில் ஏற்படும் காற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆத்துடன் காற்று மாசுபாடு குழந்தைகள் இறப்புக்கான மிக முக்கிய காரணமாக இருப்பதாகவும், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 10-ல் 1 குழந்தை சுவாச பிரச்சனை ஏற்பட்டு உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இந்த ஆய்வில் 2016-ம் ஆண்டில் மட்டும் உலக அளவில் 6 லட்சம் குழந்தைகள் சுவாச கோளாறினால் உயிரிழந்துள்ளதாகவும் அந்த கருத்தரங்கில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More