Home இலங்கை மைத்திரி கொலை சதி – நாமல் குமாரவை பொன்சேகா அச்சுறுத்தினாரா?

மைத்திரி கொலை சதி – நாமல் குமாரவை பொன்சேகா அச்சுறுத்தினாரா?

by admin

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டமை தொடர்பில் தகவல்களை வெளியிட்ட ஊழலுக்கு எதிரான படையணியின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமார தனக்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவின் நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள நாமல் குமார ஜனாதிபதி கொலை சதி பின்னணி தொடர்பில் தான் தெரிவித்த கருத்திற்கு பின்னர் சரத் பொன்சேகா நடந்துகொண்ட விதம் கவலைக்குரியதாக இருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ ஆகியோரை கொலை செய்வதற்கான சதி முயற்சிகளின் பின்னால் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் சரத்பொன்சேகா இருப்பதாக நாமல் குமார வெளியிட்ட கருத்துக்கள் இலங்கை அரசியலில் பலவேறு அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் நாட்டில் திடீர் அரசியல் மாற்றமும் அரசியல் நெருக்கடி ஒன்றும் உருவாகியுள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரி, சரத்பொன்சேகா மீது நடவடிக்கை எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என நாமல் வலியுறுத்தியுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More