Home இலங்கை சபாநாயகரின் அறிக்கை அரசியலமைப்பிற்கு எதிரானது என்கிறார் சரத் அமுனுகம..

சபாநாயகரின் அறிக்கை அரசியலமைப்பிற்கு எதிரானது என்கிறார் சரத் அமுனுகம..

by admin


சபாநாயகர் கட்சி ரீதியாகவும் கட்சிக்கு ஆதரவாகவும் அறிக்கை வெளியிடுவது அரசியலமைப்பிற்கு எதிரானது என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (05.11.18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.  இன்று காலை சபாநாயகர் கரு ஜயசூரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு புதிய அரசாங்கம் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரையில் முன்னர் இருந்த நிலைப்பாட்டிலேயே தான் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்த அறிக்கையை தாங்கள் கண்டிப்பதாகவும் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.  இதேவேளை, அரசியல் ரீதியான நெருக்கடியாக நிலமையை நாட்டிற்குள் ஏற்படுத்தும் விதமாக இந்த அறிக்கை சபாநாயகரினால் வெளியிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More