Home இலங்கை “என் அன்புக்குரிய தமிழ், முஸ்லிம் மக்களே இந்த நாட்டை கட்யெழுப்ப உதவி செய்யுங்கள்”

“என் அன்புக்குரிய தமிழ், முஸ்லிம் மக்களே இந்த நாட்டை கட்யெழுப்ப உதவி செய்யுங்கள்”

by admin


“என் அன்புக்குரிய தமிழ், முஸ்லிம் மக்களே நான் உங்களிடம் கேட்பது, இந்த நாட்டை கட்யெழுப்ப உதவி செய்யுங்கள். நான் உங்களை நம்புகின்றேன். நீங்கள் எப்போதும் என்னை நம்ப வேண்டும். இன்று உங்களுக்கு நல்ல காலம் என தமிழில் உரையாற்றும் போது ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பலரது அர்ப்பணிப்புடன் அமைக்கப்பட்டுள்ள தற்போதைய அரசாங்கத்தை எக்காரணத்திற்காகவும் யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். ” மக்கள் மகிமை ” பேரணியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் ஒரே மேடையில் அமர்ந்திருந்து மக்கள் மத்தியில் உரையாற்றினர்.

புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் விதத்தில் பாராளுமன்ற சுற்று வட்டத்திற்கு அருகில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டு சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஸ “அபிவிருத்திக்காவும் மக்களின் நலன்களுக்காகவும் ஜனாதிபதி மைத்திரியுடன் இணைந்து பயணிக்கவுள்ளேன். நாட்டின் எதிர்கால குழந்தைகளின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். நான் ஜனாதிபதியின் இடத்தில் இருந்திருந்தால் இவ்வாறான முடிவொன்றை எடுத்திருக்க மாட்டேன். நாம் ஒன்றிணைந்தது நாட்டு நலன்கருதியே. ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டின் பிள்ளைகளின் உரிமையை விற்க ஆயத்தமானார். அனைத்திற்கும் வரிச் சுமை சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த 3 வருடங்கள் ரணில் விக்ரமசிங்கவுடன் கடமையாற்றியதன் பின்னரே ஜனாதிபதி இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை எடுத்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கடமையாற்றுவது இலகுவான ஒரு விடயம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More