Home இந்தியா சத்தீஸ்கரில் பேருந்து மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் – 4 பேர் பலி

சத்தீஸ்கரில் பேருந்து மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் – 4 பேர் பலி

by admin

சத்தீஸ்கரில் பேருந்து ஒன்றின் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளதனால் அவர்கள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தண்டேவாடா மாவட்டத்தில் சென்றுகொண்டிருந்த ஒரு பேருந்தினை மாவோயிஸ்டுகள் இன்று வெடிகுண்டு வைத்து தகர்த்ததில் பேருந்தின் பெரும்பகுதி சேதமடைந்துள்ளதுடன் 3 பொதுமக்கள் மற்றும் ஒரு பாதுகாப்புபடை வீரர் என 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது

விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த சிலரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.சத்தீஸ்கரில் எதிர்வரும் 12ம் திகதி முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More