Home பிரதான செய்திகள் டி வில்லியர்ஸ் – ஸ்மித் பாகிஸ்தானில் விளையாட மறுப்பு

டி வில்லியர்ஸ் – ஸ்மித் பாகிஸ்தானில் விளையாட மறுப்பு

by admin


பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் நடத்தப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் 2019 தொடரில் பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கமாட்டோம் என டி வில்லியர்ஸ் மற்றும் ஸ்மித் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.  பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்திருந்த இலங்கை வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தினைத் தொடர்ந்து வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாட அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் லீக்கை நடத்தி வருகின்ற பாகிஸ்தான் சொந்த நாட்டில் மீண்டும் கிரிக்கெட் போட்டி நடைபெற வேண்டும் என்பதற்காக இறுதிப் போட்டி மற்றும் அதற்கு முந்திய போட்டிகளை பாகிஸ்தானில் நடத்தி வருகிறது. இந்தநிலையில் 2019 சூப்பர் லீக் போட்டிகளின் பெரும்பாலான போட்டிகளை பாகிஸ்தானில் நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்தப் போட்டிகளுக்காக சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள தென்னாபிரிக்கா அணியின் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் அவுஸ்திரேலியாவின் ஸ்மித்தும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். எனினும் குறித்த இருவரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மட்டும்தான் விளையாடுவோம் எனவும் பாகிஸ்தான் சென்று விளையாட மாட்டோம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More