225
சென்னைக்கு அருகே 300 கி.மீ., நாகைக்கு அருகே 300 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள கஜா புயல் இன்று நள்ளிரவு பாம்பன் – கடலூர் இடையே புயல்; கரையை கடக்கும் என வானிலை மைய நிலையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 80 முதல் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் ராமேஸ்வரத்தின் அநேக இடங்களில் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னைக்கு அதிகமான தாக்கம் இருக்காது எனவும் சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவித்துள்ள நிலையில் சில மாவட்டங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love