Home இலங்கை சபாநாயகருக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

சபாநாயகருக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

by admin

சபாநாயகர் கருஜெயசூரியவுக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரவுள்ளதாக ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். சபாநாயகர் பக்கச்சார்பாக நடந்துகொண்டார் என்பதை அடிப்படையாக வைத்தே இவ்வாறு நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து தாங்கள் தற்போது ஆராய்ந்து வருவதாகவும் விரைவில் இதுகுறித்து தீர்மானிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் பாராளுமன்ற நடைமுறைகள் அனைத்தையும் புறக்கணித்துள்ளார் எனவும் இதன் காரணமாகவே ஜனாதிபதி சபாநாயகரை பாராளுமன்ற விதிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளவேண்டிய நிலையேற்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சபாநாயகர் உரிய முறையில் பாராளுமன்ற அமர்வுகளை நடத்தும் வரை அனைத்து அமர்வுகளையும் தாங்கள் நிராகரிப்போம் எனவும் அந்தவகையில் திங்கட்கிழமை நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வுகளையும் தாங்கள் நிராகரிப்போம் எனவும் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More