Home இலங்கை மகிந்தவிடம் இருந்து மீட்ட நாட்டை, மைத்திரியிடமிருந்து பாதுகாக்க வேண்டும்…

மகிந்தவிடம் இருந்து மீட்ட நாட்டை, மைத்திரியிடமிருந்து பாதுகாக்க வேண்டும்…

by admin


ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்ட மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அவரது அரசாங்கத்திடமிருந்து நாட்டினை மீட்டெடுப்பதற்காகவே 2015 ஆம் ஆண்டில் அனைவரும் ஒன்றிணைந்து போராடி மைத்திரிபால சிறசேனவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போது ஜனநாயகத்தினை சீர்குலைக்கும் அவரிடமிருந்து நாட்டினைப் பாதுகாக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளதாக கவலைவெளியிட்டுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலை தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில. கருத்து வெளியிட்ட அவர், 2015 ஜனவரி மாதம் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கிய போது அவர் நிறைவேற்றுதிகாரம் உடைய ஜனாதிபதி முறையினை இல்லாமல் செய்வார் என்பதே தமது எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் அவர் நிறைவேற்றதிகாரத்தினை மாத்திரமன்றி, ஜனாதிபதி ஒருவருக்கு இல்லாத அதிகாரங்களையும் பயன்படுத்துவதற்கு முயற்சித்து வருகின்றார். இவ்வாறான ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்பிற்கும் விரோதமான செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More