Home இலங்கை சனத்ஜெயசூரிய மீது இந்திய காவல்துறையினர் குற்றச்சாட்டு

சனத்ஜெயசூரிய மீது இந்திய காவல்துறையினர் குற்றச்சாட்டு

by admin


முன்னாள் இலங்கை அணி தலைவர் சனத்ஜெயசூரிய மீது இந்திய காவல்துறையினர் பழுதடைந்த பாக்குகளை கடத்தியதாக குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். இந்தியாவின் நாக்பூரில் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான பழுதடைந்த பாக்குகளை இந்திய அதிகாரிகள் கைப்பற்றிய வேளை அதற்கும் சனத்ஜெயசூரியவுக்கும் தொடர்பிருப்பது தெரியவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனை தொடர்ந்து மும்பாய் காவல்நிலையத்துக்கு சனத் ஜெயசூரிய அழைக்கப்பட்டார் எனவும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் குறித்த கடிதமொன்றை இந்திய அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பிவைத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அத்துடன் இரண்டு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் டிசம்பர் 2 ம் திகதி விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தோனேசியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட பாக்கு இந்தியாவிற்கு கடத்தப்பட்டுள்ளது எனவும் இலங்கை வீரர்கள் அரசாங்கத்தில் தங்களுக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி அனுமதிப்பத்திரத்தை பெற்று போலி நிறுவனங்களை உருவாக்கியுள்ளனர் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More