Home பிரதான செய்திகள் இறந்துவிட்டதாக பரவிய வதந்திகளுக்கு மெக்கலம் விளக்கம்

இறந்துவிட்டதாக பரவிய வதந்திகளுக்கு மெக்கலம் விளக்கம்

by admin


நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் நாதன் மெக்கலம் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார் என்று பரவிய வதந்திகளுக்கு மெக்கலம் விளக்கம் அளித்துள்ளார். நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் சகோதரர்களான நாதன் மெக்கலம் மற்றும் பிரண்டன் மெக்கலம் ஆகியோர் கிரிக்கெட்டிருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், நாதன் மெக்கலம் பல்வேறு நாடுகளில் நடக்கும் லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் நாதன் மெக்கலம் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் இறந்துவிட்டார் என அவரின் மனைவி அறிவித்துள்ளதாக வதந்தி பரவியிருந்தது. இந்த வதந்தியைக் கேட்டு சிரித்த நாதன் மெக்கலம் தான் உயிரோடுதான் இருக்கிறேன், யாரும் வதந்திகளை நம்பாதீர்கள் என டருவிட்டரில் விளக்கமளித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More