Home இலங்கை கருணாவும் பிள்ளையானும் எமக்கு உதவி புரிந்தவர்கள்! அரசியல் கைதிகள் ஆபத்தானவர்கள்!

கருணாவும் பிள்ளையானும் எமக்கு உதவி புரிந்தவர்கள்! அரசியல் கைதிகள் ஆபத்தானவர்கள்!

by admin

“அன்று விடுதலைப் புலிகளை தோற்கடிக்க உதவி தேவைப்பட்ட வேளையில் பிள்ளையான், கருணா ஆகியோரை இணைத்துக் கொண்டதாகவும் அது ஒரு போர் வியூகம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணர்தன குறிப்பிட்டுள்ளார்

எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விடுவிக்க கோரும், அரசியல் கைதிகள் நாட்டிற்கு மிகவும் ஆபத்தானவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தமக்கு ஒத்துழைப்பு வழங்கிய பின்னர், கருணாவும் பிள்ளையானும் ஆயுதத்தினை கைவிட்டு ஜனநாயக வழிக்கு மாறியதாகவும் அவர்கள் தம்முடன் இணைந்து அரசியல் பயணத்தில் ஈடுபட்டதாகவும் கூறினார்.

இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விடுவிக்க கோருபவர்கள் நாட்டிற்கு ஆபத்தானவர்கள் என்றும் அவர்கள் இறுதிவரையில் ஆயுதமேந்தி, களமாடி இராணுவத்தினரை அழித்தவர்கள் என்பதால் அவர்களை விடுவிப்பது ஆபத்தானது என்றும் அவர் கூறினார்.

இன்று வவுணதீவில் இரு காவற்துறையினர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மாவீரர் தின நிகழ்வுகளைத் தடுத்த காரணத்தால் தான் அவர்கள் கொலைச் செய்யப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணர்தன குறிப்பிட்டார்.

கடந்த வருடங்களில் மாவீர் தின நிகழ்வுகள், அரசாங்கத்தின் அனுசரணையுடன் நடைபெற்றதாகவும் இந்த முறை அது தடுக்கப்படடுள்ளமையாலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More