Home இந்தியா அதிவேக இணைய சேவையை அளிக்க உதவும் ஜிசாட்–11 செயற்கைக்கோள் நாளை ஏவப்படவுள்ளது

அதிவேக இணைய சேவையை அளிக்க உதவும் ஜிசாட்–11 செயற்கைக்கோள் நாளை ஏவப்படவுள்ளது

by admin


அதிவேக இணைய சேவையை அளிக்க உதவும் வகையில், நாளை அதிகாலையில் ஜிசாட்–11 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படவுள்ளது. இதற்காக தென்அமெரிக்காவில் உள்ள பிரெஞ்ச் கயானா விண்வெளி மையத்தில் இஸ்ரோ அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர் . இந்தியாவின் தொலைதொடர்புக்கான அதிக நிறை கொண்ட செயற்கைக்கோள் ஜிசாட்–11 5,854 கிலோ நிறை கொண்டது. . நாளை (டிசம்பர் 5) அதிகாலை 2.07 முதல் 3.23 மணிக்குள் ஜிசாட்-11 விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

கடந்த மார்ச் 26 திகதி ஜிசாட்-11யை விண்ணில் செலுத்தத் திட்டமிட்டிருந்த போதும் அதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த முயற்சி தள்ளிவைக்கப்பட்டது.  இதனையடுத்து மீண்டும் செயற்கைக்கோள் பெங்களூருவுக்குக் கொண்டுவரப்பட்டு குறைபாடுகள் சரி செய்யப்பட்ட நிலையில் ஏரியான் 5 விண்கலம் மூலம் இது விண்ணில் ஏவப்படவுள்ளது..

இந்த செயற்கைக்கோள் மூலமாக,இந்தியாவில் இதுவரை இணைய சேவை பெறாத பகுதிகள் கூட பயன் பெறும் என்று எதிர்பார்க்கபடுகிறது. ஏற்கனவே ஏவப்பட்ட ஜிசாட் – 29, ஜிசாட் – 19 மூலமாக அதிவேக இணையதள சேவை அளிக்கப்பட்டு வருகிறது. ஜிசாட் -11 செயற்கைக்கோளுடன், தென்கொரியாவின் ஜியோ– கோம்ப்சாட்2ஏவும் ஏவப்படவுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More