Home இலங்கை புன்னாலைக்கட்டுவனில் கிராமசேவகரின் இடமாற்றத்தைக் கண்டித்து போராட்டம்

புன்னாலைக்கட்டுவனில் கிராமசேவகரின் இடமாற்றத்தைக் கண்டித்து போராட்டம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் கிராமசேவகர் இடமாற்றத்தைக் கண்டித்து அப் பகுதி மக்கள்இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  அரசியல் பழிவாங்கல் காரணமாகவே கிராமசேவகருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்ற அப்பகுதிமக்கள் இந்த இடமாற்றத்தை ரத்துச் செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். புன்னாலைக்கட்டுவன் 208 கிராம சேவகருக்கு கடந்த சில தினங்களிற்கு முன்னர் வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்திற்கு எதிராக அப் பகுதிமக்கள் கடுமையான எதிர்ப்பைவெளியிட்டு வந்திருந்தனர்.

இந் நிலையில் அந்தஇடமாற்றத்தைக் கண்டித்தும் இடமாற்றத்தை இரத்துச்செய்ய வலியுறுத்தியும் குறித்த கிராம சேவகர் அலுவலகம் முன்பாக அப்பகுதி மக்கள்இணைந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.  இதன் போது அரசியல் பழிவாங்கல் காரணமாகவே குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மக்கள் இந்த இடமாற்றத்தை ரத்துச் செய்து தமக்கு முன்னர் இருந்த கிராமசேவகரையே மீள நியமிக்கவேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றையும் பிரதேச செயலர் மற்றும் அரசஅதிபர் ஆகியோருக்கும் அப்பகுதி மக்கள் வழங்கியுள்ளனர்.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More