Home இலங்கை சபரிமலையில் 6-வது முறையாக வருகிற 16ம் திகதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது…..

சபரிமலையில் 6-வது முறையாக வருகிற 16ம் திகதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது…..

by admin

சபரிமலையில் 6-வது முறையாக வருகிற 16ம் திகதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் கடந்த மாதம் 16-ந்திகதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது.

எனினும் சபரிமலை கோவிலில் இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள், அரசியல் கட்சியினர், இந்து அமைப்புகள் போராட்டம் நடத்துவதால் நடை திறந்த முதல் நாளில் இருந்தே சபரிமலையில் 144 தடை உத்தரவு போடப்பட்டது.

அங்கு தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் 144 தடை உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் 6-வது முறையாக வருகிற 16ம் திகதி வரை சபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பத்தனம் திட்டா கலெக்டர் பிறப்பித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More