Home இலங்கை ஹெரோய்ன் போதைப்பொருளுடன் பங்களாதேஸ் பெண் கைது

ஹெரோய்ன் போதைப்பொருளுடன் பங்களாதேஸ் பெண் கைது

by admin


பங்களாதேஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் 1 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். தெகிவளை- காலி வீதியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த நிலையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  இவரிடம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளினை அடுத்து அவர் வாடகைக்குத் தங்கியிருந்த இரத்மலானைப் பகுதியில் உள்ள வீட்டிலிருந்து 31 .329 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் மீடகப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட ஹெரோய்ன் போதைப்பொருளின் மொத்த பெறுமதி 388 மில்லியன் ரூபாய் பெறுமதியென காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 23 வயதான குறித்த சந்தேகநபர், இன்றைய தினம் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படமவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More