Home இலங்கை கிளிநொச்சியில் காவல்துறை பிக்கப் மோதி விபத்து – ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில்

கிளிநொச்சியில் காவல்துறை பிக்கப் மோதி விபத்து – ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


இன்று இரவு (2018.12.16) கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில் முள்ளியவளை காவல் நிலையத்திற்கு சொந்தமான ராட்டா ரக பிக்கப் ஒன்று வீதியை கடக்க முயன்ற ஒருவரை மோதியதில் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலை அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர் 52 வயதான கட்டன் திக்கோயா பிரதேசத்தை சேர்ந்த பு.பாலசுபிரமணியம் எனத் தெரிய வருகின்றது. யாழப்;பாணத்தில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முள்ளியவளை காவல் நிலையத்திற்கு சொந்தமான ராட்டா ரக பிக்கப் வீதியை கடக்க முயன்ற ஒருவரை மோதியதிலையே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது அருகில் இருந்த பாலத்தில் வாகனம் மோதியதில் வாகனமும் சேதத்திற்குள்ளாகியுள்ளது

வாகனத்தை ஓடிய காவல்துறை சாரதி கிளிநொச்சி காவல்துறை யினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More