Home உலகம் சோமாலியாவில் 60க்கு மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

சோமாலியாவில் 60க்கு மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

by admin


கடந்த இரு நாட்களில் சோமாலியாவில் அமெரிக்கா ராணுவத்தினர் நடத்திய வான்வெளி தாக்குதலில்;; 60க்கு மேற்பட்ட அல் ஷபாப் கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அல் ஷபாப் கிளர்ச்சியாளர்கள் செயற்பாடுகள் சோமாலியாவில் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிற போதிலும் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த சோமாலியா அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுடன அமெரிக்க ராணுவமும் இணைந்துள்ளது.

இந்நிலையில், அங்கு அமெரிக்கா ராணுவம் வான்வெளி தாக்குதலில் 60க்கு மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே நடத்தப்பட்டது எனவும் இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் யாரும் கொல்லப்படவில்லை எனவும் அமெரிக்கா ராணுவம் தெரிவித்துள்ளது.

சோமாலியாவில் இந்த தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதலாக இது கருதப்படுகின’;றமை குறிப்பிடத்தக்கது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More