Home உலகம் ஏமனில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்த சில நிமிடங்களில் முறிந்துபோயுள்ளது….

ஏமனில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்த சில நிமிடங்களில் முறிந்துபோயுள்ளது….

by admin

உள்நாட்டுப் போர் தீவிரமாக நடந்துவரும் ஏமனில், போர்நிறுத்தம் அமுலுக்கு வந்த சில நிமிடங்களில் ஒப்பந்தம் மீறப்பட்டு ஆங்காங்கே மோதல்கள் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஏமனில் உக்கிரமாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன்படி உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் ஹொடைடா மாகாணம் மற்றும் நிவாரணப் பொருள்கள் செல்வதற்கான நுழைவாயிலாக இருக்கிற துறைமுக நகரமான ஹொடைடாவில் போர் நிறுத்தம் செய்வது என ஹவுத்தி கிளர்ச்சியாளர்களும், அரசாங்கத் தரப்பும் ஒப்புக்கொண்டன.

எனினும் போர் நிறுத்தம் தொடங்கிய உடனேயே இந்த நகரில் ஆங்காங்கே மோதல்கள் நிகழ்ந்துள்ளன. கிழக்கு ஹொடைடாவில் அரசாங்கப் படைகள் மீது கிளர்ச்சியாளர்கள் ஷெல் குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த வியாழக்கிழமை சுவீடனில் ஐ.நா. ஏற்பாடு செய்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன. நான்கு ஆண்டுகளாக நடந்து வரும் இந்த போரினை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஆரம்பமாக இது இருக்கும் நம்பப்பட்டது

உடனடியாக போர் நிறுத்தம் அமுலுக்கு வருவதாக முதலில் கூறப்பட்டாலும், ஆங்காங்கே நடந்து வந்த தாக்குதல்களாலும், மோதல்களாலும் யுத்த நிறுத்தம் செயல்பாட்டுக்கு வருவது தாமதமடைகின்றது. ஏமனில் போரால் பாதிக்கப்பட்ட 80 லட்சம் பேர் பட்டினியால் துன்பப்படும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More