Home இலங்கை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கச் சென்றவர்களுக்கு இடையூறு விளைவித்தோருக்கு விளக்கமறியல்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கச் சென்றவர்களுக்கு இடையூறு விளைவித்தோருக்கு விளக்கமறியல்

by admin

கிளிநொச்சி கண்டாவளையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கச்சென்ற பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவித்து அரச வாகனத்தை தடுத்து நிறுத்தி அசௌகரியம் விளைவித்த பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட இரண்டு பேரையும் எதிர்வரும் 28ம் வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி கண்;டாவளைப்பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நலன்புரிநிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு சேவைகளை வழங்கும் பொருட்டு கண்டாவளை மகாவித்தியாலயத்தில்;;; அமைந்துள்ள நலன்புரிநிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உதவிப்பொருட்களை வழங்கச்சென்ற பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச உத்தியோகத்தர்;களை குறித்த பிரதேச சபைஉறுப்பினர் உள்ளிட்ட நான்கு பேர்; தகாத வார்த்தைப்பிரயோகங்களை மேற்;கொண்;டுள்ளதுடன்,அவர்களது பணிகளுக்கு இடையூறு விளைவித்துள்ளனர்.

அத்துடன் அவர்கள் பயணித்த இரண்டு வாகனங்களையம் தடுத்து நிறுத்தியுள்ளனர். இது தொடர்பில் கடந்த திங்கள் கிழமை கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து செவ்வாய் கிழமை சம்பவ இடத்திற்குச்சென்;ற காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புபட்ட கரைச்சிப்பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்டஇரண்டு பேரை கைது செய்திருந்தனர்.

அவர்களை காவல்துறையினர் நேற்றையதினம் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியநிலையில் இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 28மதிகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவடட நீதிவான நீதிமன்றம் உத்தரவி;ட்டுள்ளது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More