Home இலங்கை மைத்திரி, மீண்டும் ஜனாதிபதியாக கனவிலும் நினைக்கவே கூடாது!

மைத்திரி, மீண்டும் ஜனாதிபதியாக கனவிலும் நினைக்கவே கூடாது!

by admin

மஹிந்த ராஜபக்ஸவுடன் சேர்ந்து அரசியல் சூழ்ச்சி ஊடாக நாட்டைச் சீரழித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மீண்டும் ஜனாதிபதியாகுவதற்கு கனவிலும் நினைக்கக்கூடாது என்று ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளித் தலைவரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதியாக நாட்டு மக்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள் என்றும் மீண்டும் பதவிக்கு ஆசைப்பட்டமையினாலேயே ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு இறுதியில் தோல்வியே கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் ஐக்கிய தேசிய முன்னணி விரைவில் ஜனநாயக தேசிய முன்னணியாக உருவாக்கப்படும் என்றும் ஜனநாயக தேசிய முன்னணியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குபவரே வெற்றியடைவார் என்றும் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More