Home சினிமா இனி நான் அந்த ரிஸ்கை எடுக்க மாட்டேன் – பிரபாஸ்

இனி நான் அந்த ரிஸ்கை எடுக்க மாட்டேன் – பிரபாஸ்

by admin


இனி நான் அந்த ரிஸ்கை எடுக்க மாட்டேன் என நடிகர் பிரபாஸ் தெரிவித்துள்ளார். ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களில் நடிக்க 5 ஆண்டுகளை ஒதுக்கியிருந்த பிரபாஸ் அந்தக் காலத்தில் வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை.

இந்தநிலையில் பாகுபலி போன்று இனி எந்த படத்திற்காகவும் இத்தனை ஆண்டுகளை ஒதுக்குவேன் என தோன்றவில்லை எனத் தெரிவித்த அவர் இனி இது போன்ற ரிஸ்க் எடுத்தால் அது தனது கரியரை பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.  பாகுபலி போன்ற பட வாய்ப்பு வாழ்க்கையில் ஒரு முறை தான் வரும் எனடபதனால் அதற்கு கூடுதல் அர்ப்பணிப்பு தேவைப்பட்டடிதனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு ஏற்றது போன்ற படங்களை தேர்வு செய்து நடிக்க முயற்சி செய்வதாகவும் பொலிவுட் படங்களில் நடிக்க விருப்பம் உள்ளதெனவும் தெரிவித்த அவர் ஹிந்தி ,பஞ்சாபி உள்பட எந்த மொழி படங்களிலும் நடிக்க தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More