Home இலங்கை பி.பி.சீயின் புகழ்பூத்த செய்தி வாசிப்பாளர் ஜோர்ஜ் அழகையா புற்று நோயினால் பாதிப்பு

பி.பி.சீயின் புகழ்பூத்த செய்தி வாசிப்பாளர் ஜோர்ஜ் அழகையா புற்று நோயினால் பாதிப்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பி.பி.சீ செய்தி சேவையின் புகழ் பூத்த செய்தி வாசிப்பாளர் ஜோர்ஜ் அழகையா இரண்டாவது தடவையாகவும் புற்று நோயினால் பீடிக்கப்பட்டுள்ளார். ஜோர்ஜ் அழகையா இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. பி.பி.சீயின் கடமையாற்றி வரும் சிறுபான்மை பின்னணியுடைய ஊடகவியலாளர்களில் அதிகளவு சம்பளம் பெற்றுக் கொள்ளும் ஊடகவியலாளராக அழகரட்னம் கருதப்படுகின்றார்.


62 வயதான அழகையா இதற்கு முன்னரும் குடல் புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2014ம் ஆண்டில் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அழகையா சிகிச்சைகளின் பின்னர் 2015ம் ஆண்டில் பணிக்கு திரும்பியிருந்தார்.

திறமையான மருத்துவர்கள் தம்மை மீளவும் காப்பாற்றுவார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 1989ம் ஆண்டில் அழகையா பி.பி.சீ உலக சேவையில் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More