Home உலகம் ஏமனில் நாளொன்றுக்கு 5 குழந்தைகள் இறக்கின்றன – ஐ.நா

ஏமனில் நாளொன்றுக்கு 5 குழந்தைகள் இறக்கின்றன – ஐ.நா

by admin


ஏமனில் இடம்பெற்றுவரும் உள் நாட்டுப் போர் காரணமாக ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்திருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என ஐ.நா. தெரிவித்துள்ளது.  கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு நாளும் 5 குழந்தைகள் இறப்பதாகவும் ஐ. நா.வின் அறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் ஏமனில் உள் நாட்டுப் போர் இடம்பெற்ற இரண்டு வருடங்களில் சுமார் 3 லட்சத்துக்கு அதிகமான குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் அவர்கள் ஒவ்வொரு நாளும் பசி, வன்முறை தாக்குதலை எதிர்கொண்டு வருகின்றனர் எனவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் ஏமனின் ஒட்டுமொத்த இளம் தலைமுறையும் வறுமையிலும், வன்முறையிலும் வளர்கின்றனர் எனவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More