Home இலங்கை மோசடிகள் தொடர்பில் விசாரணை நடாத்த விசேட நீதிமன்றம்

மோசடிகள் தொடர்பில் விசாரணை நடாத்த விசேட நீதிமன்றம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடாத்துவதற்கு விசேட நீதிமன்றமொன்று நிறுவப்பட உள்ளது. ஊழல், மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான விசேட மேல் நீதிமன்றத்தை உருவாக்குவதற்கான சட்ட வரைவை கொண்டுவருவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. இந்த விசேட நீதிமன்றம் குறித்த அமைச்சரவைப் பத்திரம், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

விசேட மேல் நீதிமன்றங்களை அமைப்பதற்கான சட்டவரைவு, அரச சட்ட வரைஞரினால், தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டவரைவுக்கு அமைச்சரவையில் அனுமதி பெறப்பட்ட பின்னர், இந்த ஆவணம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நிதிக்குற்றங்கள் மற்றும் ஊழல்கள், குறித்து விசாரணை செய்யும் நோக்கில் இந்த வகை நீதிமன்றங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த விசேட நீதிமன்றமானது, மூன்று நீதியரசர்களைக் கொண்டாக அமைக்கப்படவுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More