Home இலங்கை வெல்லப்போவது யார் – சிவசக்தி ஆனந்தனுக்கு சிறிதரன் சவால்…

வெல்லப்போவது யார் – சிவசக்தி ஆனந்தனுக்கு சிறிதரன் சவால்…

by admin

இரண்டு கோடி ரூபா வாங்கியதை சிவசக்தி ஆனந்தனால் ஆதாரத்துடதன் உறுதிப்படுத்த முடியுமா?

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசிடம் இருந்து இரண்டு கோடி ரூபாக்களை வாங்கியதாக நேற்று(20) வவுனியாவில் தெரிவித்திருக்கிறார். எனவே நான் அவர்களிடம் சவால் விடுகின்றேன் முடிந்தால் அதனை ஆதாரத்துதடன் நிரூபிக்க முடியுமா என தெரிவித்துள்ளார் இன்று(21) கிளிநொச்சி வட்டக்கச்சி பொதுச் சந்தையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் வவுனியாவில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்ற ஈபிஆர்எல்எப் எந்த வட்டாரத்திலும் வெல்லமாட்டார்கள் இந்த இடத்தில் நீங்கள் அதனை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். எனத் தெரிவித்த அவர் எமது தமிழ் மக்களை ஈபிஆர்எல்எப் கொலை செய்தமையினையும், கொன்று குவித்தமையினையும் மக்கள் மறந்து விடமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்

அத்தோடு வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கொண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக போராட்டத்தை கொண்டது சிவசக்தி ஆனந்ததான்.எனவும் குற்றம் சாட்டினார்.

மேலும் நாங்கள் இந்த தேர்தலில் இடைக்கால அறிக்கைக்கு ஆணை வழங்குகள் என்று மக்களிடம கோரவில்லை இது அதற்கான தேர்தலும் அல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்காவது இடைக்கால அறிக்கைக்கு ஆணை கோரி இந்த தேர்தலில் வாக்களியுங்கள் என்று கோரியுள்ளனரா அதனை உறுதிப்படுத்த முடியுமா எனுவம் கேள்வி எழுப்பிய அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே ஒரு இலக்கு நோக்கி பயணித்துகொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More