Home இந்தியா பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க விருப்பமா, இல்லையா?

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க விருப்பமா, இல்லையா?

by admin

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க விருப்பமா? இல்லையா? என்பது தொடர்பாக மத்திய அரசு 3 மாதத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு 2016-ம் ஆண்டு தமிழக அரசு கடிதம் எழுதியது. ஆனால், மத்திய அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது இந்த உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More