Home சினிமா நடிகர் சந்திரன் மீது பண மோசடி முறைப்பாடு

நடிகர் சந்திரன் மீது பண மோசடி முறைப்பாடு

by admin

நடிகர் சந்திரன் மீது பண மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது. கயல் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் சந்திரன் அதன் பின்னர் அவர் ரூபாய் படத்திலும் நடித்திருந்தார். தற்போது அவர் கிரகணம், திட்டம்போட்டு திருடுற கூட்டம், பார்ட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கயல் சந்திரன் மீது தி.நகரைச் சேர்ந்த பிரபு வெங்கடாசலம் எனும் திரைப்படத் தயாரிப்பாளர் முறைப்பாடு செய்துள்ளார்

அந்த முறைப்பாட்டில் கயல் சந்திரன் 5 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். சினிமா தயாரிப்பாளரான தானும் கயல் சந்திரன் மற்றும் ரகுநந்தன் ஆகியோர் இணைந்து திருடுற கூட்டம் என்ற படத்தை தயாரிப்பதகவும் அதற்காக 5 கோடி பணம் கொடுத்து அந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் ஆகியதாகவும் தெரிவித்துள்ளார்.


2 மூவி பப்ஸ், அக்ராஸ் பிலிம்ஸ் என்ற நிறுவனங்களை ஆரம்பித்து அந்தப் படத்தை தயாரித்ததாகவும் ஆனால் தற்போது என்னை அந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்கிற தகுதியில் இருந்து நீக்கி விட்ட அவர்கள் கடந்த ஒரு வருடமாக தான் கொடுத்த பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றி வருகிறார்கள் எனவும் அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். அந்தப் படத்தை தற்போது வெளியிட உள்ளதனால் இது தொடர்பாக கயல் சந்திரன் மற்றும் ரகுநந்தன் மீது சட்ட நடவடிக்கை எடுத்து தனது பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும் என தனது முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More