Home உலகம் தற்கொலைத்தாக்குதலின் எதிரொலி – ஆப்கானிஸ்தானில் சேவ் த சில்ரன் நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளது

தற்கொலைத்தாக்குதலின் எதிரொலி – ஆப்கானிஸ்தானில் சேவ் த சில்ரன் நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளது

by admin


ஆப்கானிஸ்தானில் தங்களது நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக சேவ் த சில்ரன் அமைப்பு தெரிவித்துள்ளது.   ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் அமைந்திருக்கும் தங்களது அலுவலகம் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல் காரணமாக இவ்வாறு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளது.

குறித்த அலுவலகம் மீது ஐ.எஸ் பயங்கரவாதிகள் நேற்றையதினம் மேற்கொண்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டிருந்தனர். குறித்த அலுவலகத்தில் சுமார் 50 பேர் இருந்த நிலையில் அலுவலகத்துக்கு 3 ஐ.எஸ் பயங்கரவாதிகள் வெடிப்பொருட்களை வெடிக்க செய்து தாக்குதலை மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தநிலையிலேயே தங்களின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னர், ஆப்கானிஸ்தானில் தாங்கள் மேற்கொண்டு வந்த நடவடிக்கைகளை நிறுத்தியுள் சேவ் த சில்ரன் அமைப்பு  தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More