Home இலங்கை தபால் மூலம் வாக்களித்தமையை காணொளியாக பதிவு செய்து முகநூலில் பதிவிட்ட 4 பேர் கைது…

தபால் மூலம் வாக்களித்தமையை காணொளியாக பதிவு செய்து முகநூலில் பதிவிட்ட 4 பேர் கைது…

by admin


தபால் மூலம் வாக்களித்தமையை காணொளியாக பதிவு செய்து முகநூலில் பதிவிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தபால் மூல வாக்களிப்பில் தாம் எவ்வாறு வாக்களித்தோம் என்பதனை புகைப்படம் எடுத்த மற்றும் காணொளியாக பதிவிட்ட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். செல்லிடப்பேசிகளில் இவ்வாறு குறித்த நபர்கள் புகைப்படம் மற்றும் கணொளிகளை பதிவு செய்துள்ளனர்.

கொழும்பு, மொனராகல, ரத்தினபுரி மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் இவ்வாறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்டதாகவே இந்த நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More