Home இலங்கை 30 வருடங்களுக்கு பின் மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையை இராணுவம் விடுவித்தது…

30 வருடங்களுக்கு பின் மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையை இராணுவம் விடுவித்தது…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


கடந்த 30 வருடங்களாக இராணுவத்தினர் உல்லாச விடுதியாக பயன்படுத்தி வந்த மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை இராணுவத்தினரால் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 30 வருடங்களுக்கு முன்னர், வலி. வடக்கில் இருந்து மக்கள் இடப்பெயர்ந்த பின் மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையும் இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ளடக்கப்பட்டு இருந்தது. பின்னர் குறித்த வைத்தியசாலையை இராணுவத்தினர் தமது உல்லாச விடுதியாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்த வைத்தியசாலையானது கடற்கரையை அண்மித்த பிரதேசத்தில் அமைந்துள்ளமையினால் காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்து சிறந்த முறையில் சிகிச்சை பெறுவதற்குரிய சரியான இடம் என சுட்டிக்காட்டப்பட்டு இந்த வைத்தியசாலை விடுவிக்கப்பட வேண்டும் என தொடரச்;சியாக பாதுகாப்பு தரப்பிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்புடைய குறித்த வைத்தியசாலை நேற்று உத்தியோக பூர்வமாக இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் (காணி) எஸ்.முரளிதரன் மற்றும் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளார் வைத்திய கலாநிதி கே.நந்தகுமார் ஆகியோரிடம் அதற்குரிய பத்திரங்களை படையினர் கையளித்துள்ளனர்.

இந்த வைத்தியசாலை அண்மைக்காலம்வரை   உல்லாச விடுதியாக பயன்படுத்தப்பட்டு வந்தமையினால் தற்போது உடனடியாக இது வைத்தியசாலையாக பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. வைத்திய சாலைக்குரிய அமைப்புக்கள் மாற்றப்பட்டுள்ளன எனவே வைத்தியசாலையாக புனரமைக்கப்பட்ட பின்னரே மருத்துவ சேவைகளை ஆரம்பிக்க முடியும் என சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More