Home இலங்கை சாமர சம்பத் தஸநாயக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகினார்..

சாமர சம்பத் தஸநாயக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகினார்..

by admin

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க இன்று முற்பகல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். பதுளை தமிழ் மகளிர் வித்தியாலய அதிபரை முழந்தாளிட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் விசாரணையின் இரண்டாம் கட்டம் இன்றையதினம் இடம்பெறுகின்ற நிலையில் அவர் முன்னிலையாகியுள்ளார். அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமுலம் வழங்குவதற்காக பதுளை வலய கல்விப் பணிப்பாளர் சரத் ரணசிங்க மற்றும் பதுளை தலைமையக காவல்துறை பரிசோதகர் ஈ.எம்.வீ. தென்னகோன் ஆகியோருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையாகுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More