Home இலங்கை ஊழல், மோசடி, திருட்டு, வீண்விரயம் – கொலை அச்சுறுத்தல்களுக்கு எதிராக இணைய அழைப்பு..

ஊழல், மோசடி, திருட்டு, வீண்விரயம் – கொலை அச்சுறுத்தல்களுக்கு எதிராக இணைய அழைப்பு..

by admin

ஊழல், மோசடி, திருட்டு, வீண்விரயம் மற்றும் கொலை அச்சுறுத்தல்களுக்கு எதிராக உண்மையாகவும் சரியாகவும் நேருக்கு நேராக தம்முடன் கலந்துரையாடலில் ஈடுபட வருமாறு நாட்டின் பிரதான அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால இதனைத் தெரிவித்துள்ளார். இம்முறை தேர்தலில் வெற்றிபெறச் செய்ய வேண்டியது திருடர்களை பாதுகாக்கும் கட்சியையா அல்லது திருடர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கக்கூடிய கட்சியையா என்பதை இந்நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளர். இம்முறை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்பதற்கான காரணம் ஊழல், மோசடி, திருட்டு மற்றும் வீன்விரயத்திற்கு எதிரான தனது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பலப்படுத்துவதற்காகவே ஆகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More