Home இந்தியா ஸ்ரீசாந்த் மீதான தடை குறித்து விளக்கமளிக்குமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு உத்தரவு

ஸ்ரீசாந்த் மீதான தடை குறித்து விளக்கமளிக்குமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு உத்தரவு

by admin


முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்ததுக்கு விதிக்கப்பட்ட தமையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின்போது ஸ்ரீசாந்த்   கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அவருக்கு வாழ்நாள் தடைவிதித்தது.  எனினும் விசாரணைகள் நிறைவடைந்தநிலையில் ஸ்ரீசாந்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை எனத் தெரிவித்து டெல்லி நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.

எனினும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அவர் மீதான வாழ்நாள் தடையை நீக்கவில்லை. இதுகுறித்து கேரள உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் வழக்கு தொடர்ந்திருந்ததனை அடுத்து ஸ்ரீசாந்தின் மீதான வாழ்நாள் தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


எனினும் இந்த தீர்ப்பை எதிர்த்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு செய்த மேன்முறையீட்டினை அடுத்து ஒழுக்காறறு நடவடிக்கையில் உயர்நீதிமன்றத்தால் குறுக்கிட இயலாது எனத் தெரிவித்து , ஸ்ரீ;சாந்த் ஆயுட்கால தடையை நீக்கிய உத்தரவை நீதிமன்றம் திரும்ப பெற்றது.

இதனையடுத்து ஸ்ரீ;சாந்த் கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் மனுவை இன்று விசாரணை செய்த உச்சநீதிமன்றம் 4 வாரங்களில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More